யுவான் சுவாங் சுற்றி வந்த பகுதி எல்லாம் சீனாவுக்கு சொந்தம்(Survival Strategy)

கடந்த சில காலமாக அருணாச்சலபிரதேசம், திபெத் மற்றும் பல பகுதிகளை தனது பகுதிகளாக சீனா கூறி வந்தது. இந்தியாவில் உள்ள தோழர்களும் இந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெற்று எப்போது சீனாவோடு இந்தியா இணையும் என நீண்ட காலமாக காத்து கிடந்தனர்.இதனிடையே திடீரென சீனா,யுவான் சுவாங் பார்வையிட்ட பகுதி அனைத்தும் சீனாவின் பகுதி என அறிவித்துள்ளது இதன் மூலம் இந்தியாவை சீனா ஆக்ரமிக்கும் நிலை உருவாக உள்ளது. சீனா அமெரிக்காவிடம் சாப்ட்வேர் மற்றும் இதர பொருள்களை இந்த இணைப்பின் மூலம் 10 மடங்கு மலிவாக கொடுக்க ரகசிய உடன்பாடு செய்துள்ளதாக கூற படுகிறது. எனவே அமெரிக்காவும் இதனை சீனாவின் உள்நாட்டு பிரச்சனையாக அறிவிக்க கூடும் என்று தெரிகிறது.
"சுவர்ணமால்யாவின் அழகும் விஜயேந்திர மாமுனியின் தவமும் என்ற தலைப்பில் SFI மற்றும் CPM தோழர்களுக்கு சித்தாந்த வகுப்பு எடுத்து கொண்டிருந்த என்.ராம் அவர்களிடம் இதுபற்றி கேட்டதற்கு, இது முழுக்க முழுக்க உண்மை என்றும் சைனா பெரு மனது வைத்து இந்த முயற்சிக்கு முடிவு செய்துள்ளதாக கூறினார். மேலும் புதிய ஆட்சி முறை எப்படி இருக்க வேண்டும் என்று அறிய காஞ்சி காமகோடி விஜயேந்திரர், சங்கரையா, ஞாநி, வரதராஜ ஐயங்கார் மற்றும் மருதையன் தலைமையில் ஒரு குழு அனுப்ப படும் என்று கூறினார்.மேலும் தற்போது இருப்பது போல் மேல் சாதியினரை பொலிட்பீரோவில் பெரும்பான்மையினராக நிரப்பாமல், முழுவதுமாகவே மேல் சாதியினரை கொண்டு புதிய பொலிட்பீரோ உருவாக்கப்படும் என்றார்.இதனிடையே காஞ்சி ஜெயேந்திர சுவாமிகள் தலைமையில் ஒரு ஆன்மீக குழு சைனாவிற்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார். 2000 ஆண்டுகளுக்கு முன் சென் புத்த மதத்தை தோற்றுவித்த போதி தர்மர் காஞ்சிபுரத்திலிருந்து சைனாவிற்கு ஆன்மீக பயணம் சென்றதை நினைவு கூர்ந்தார். இன்று வாழும் சென் ஜெயேந்திரர் நடிகைகள் குழுவிற்கு தலைமை தாங்கி ஆன்மீக பயணம் செய்ய இருப்பதாக கூறினார்.
மேலும் அதிகாரம் பொலிட்பீரோவிற்கு வந்த பின்பு புதிய கம்யூனிச ஆட்சியை எதிர்க்கும் குழுவிற்கு ஞாநி மற்றும் மருதையன் ஆகியோர் தலைமை தாங்குவார்கள் என்றார். எந்த ஒரு சித்தாந்தத்தின் வெற்றியும் அதை எதிர்க்கும் குழுவை கையாலுவதில் தான் உள்ளது. எனவே அந்த இருவரையும் எதிர்க்கும் குழுவிற்கு தலைமை ஏற்க வைத்தால், உண்மையான எதிர்க்கும் தலைவர்கள் தோன்றுவதை தடுக்க முடியும் என்றும் பிற்காலத்தில் உண்மையான எதிர்புணர்வோடு வளருபவர்களை இது போன்ற தலைவர்களை வைத்து அடையாளம் காண்பதும் எளிதாக இருக்கும் என்றார்.மேலும் அனைத்து ஊடகங்களும் பெரும்பாலும் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாலும்,மீதி உள்ளவற்றையும் தங்களது கட்டுபாட்டில் எடுத்துவிட இருப்பதால், அந்த ஊடகங்களின் மூலம் இந்த இருவரும் எதிர்ப்பு தலைவர்களாக இந்தியா எங்கும் பிரகடனபடுத்தபடுவார்கள் என்றார்.
இதனிடையே RSS தலைவர் சுதர்சனம்,ஆரியர்கள் சைனாவிலிருந்துதான் இந்தியாவிற்கு வந்தார்கள் என்று நிருபர்களிடம் தெரிவித்தார். அதற்கான ஆதாரங்களையும் அவர் நிருபர்களிடம் அளித்தார். இந்த ஆதாரங்களுடன் தான் சீன தலைவர்களை சந்தித்து யாரை பொலிட்பீரோ உறுப்பினர்களாக ஆக்க வேண்டும் என்றும் விவாதிக்க போவதாக கூறினார். என்.ராம் அவர்களும் தன்னோடு வரப்போவதாக கூறினார்.
இந்த செய்தி பற்றி திரு.கருணாநிதியிடம் கேட்டதற்கு குடும்பம் தான் தனது கட்சி என்றும் தனது குடும்பத்தினருக்கு பொலிட்பீரோவில் இடம் கொடுத்தால் அது திராவிட இனத்திற்கே கொடுத்தது போல்தான் என்றார். இதனிடையே தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், கனிமொழி. ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு பொலிட்பீரோ பதவி கொடுக்க இரகசிய உடன்பாடு எற்பட்டுவிட்டதாக கூற்ப்படுகிறது.
இதனிடையே CPM கட்சியை சேர்ந்த தலைவர்கள், அதிகார பரிமாற்றம் கிடைத்தபின் இந்தியாவில் மாபெரும் கலாச்சார புரட்சி நடத்த இருப்பதாக தெரிவித்தனர். இது மாவோ நடத்தியதை விட பல மடங்கு பலமாக இருக்கும் என்று கூறினார். இந்த கலாட்சார புரட்சியின் மூலம் 30 கோடி ஏகாப்த்தியவாதி மக்களை கொன்று பாட்டாளி மக்களை விடுதலை செய்ய போவதாகவும், சுமார் 10 லட்சம் கல்லூரி மற்றும் பள்ளி கூடங்கள் இடிக்கப்படும் என்றனர். மேலும் சாப்ட்வேர் மற்றும் உற்பத்தி துறை போன்ற பணியில் உள்ளவர்களுக்கு சம்பளத்துக்கு பதில் மூன்று வேலை சீனாவில் தயார் செய்ய பட்ட உணவு வழங்கப்படும் என்றார்.
சற்று முன் வந்த செய்தி-JVP இயக்க தலைமையினர் யுவான் சுவாங் இலங்கைக்கும் சுற்று பயணம் செய்ததாகவும் அதற்கான சான்றுகளை கொண்டு வந்து என்.ராம் அவர்களிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

2 comments:

said...

ஏன் இந்த கொல வெறி ?
:))


சாணக்கியன் யார் என்பது கோவிக்கு தெரியும்.

:)))

said...

தங்கள் வருகைக்கு நன்றி கோவி.க்ண்ணன்