இஸ்ரேலும் அகண்ட பாரதமும்- அமெரிக்காவின் எஞ்சி நிற்கும் கடமைகள்

இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க ராணுவ,அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு யூதர்களின் பங்கு முக்கியமாக இருந்தது. அன்று யூதர்கள் நாடு இல்லாத நாடோடிகளாக வாழ்ந்தார்கள். யூதர்களின் உதவிக்கு பிரதி உபகாரமாக அமெரிக்க அரசு, அவர்களுக்கு இஸ்ரேல் என்னும் நாட்டை உருவாக்கி கொடுத்தது. அன்று யூதர்கள் இருந்த நிலையில் இன்று ஆரியாகள் இருக்கிறோம். அதாவது இன்று கணிப்பொறி துறை வளர்ச்சிக்கு நாம் ஆற்றும் பங்கினை ஜார்ஜ் புஷ் அறிவார். மேலும் NASA நிறுவனத்தி தலமை விஞ்ஞானி முதல் வாயிற் காவலர் வரை நாம் தான் என்பதை தங்களுக்கு வந்த Forward mail மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.இவ்வாறு அமெரிக்காவின் முன்னேற்றத்திற்க்காக பாடுபடும் நாம், மொய்னோ மற்றும் திராவிட திம்மிகளின் சர்வாதிகார ஆட்சியினால் நாடிழந்து அகதிகளாக உலகமெங்கும் வாழ்கிறோம். அமெரிக்கா யூதர்களுக்கு இஸ்ரேல் வாங்கி தந்ததை போல் நமக்கு அகண்ட பாரதத்தை வாங்கி கொடுக்க வேண்டிய நாள் நெருங்கி வருகிறது. இதற்கு சுப்ரமணிய சுவாமி போன்ற சர்வ தேச தலைவர்கள் உடனடியாக lobby செய்ய தொடங்க வேண்டும்

12 comments:

said...

இது என்ன கொலை வெறி? அமெரிக்கா யார் இந்தியாவின் விஷயத்தில் மூக்கை நுழைக்க?

அல்லது ஒரு வேளை இப்பதிவை நகைச்சுவை நையாண்டியின் கீழ் வைத்துள்ளீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

வருகைக்கு நன்றி பிதாமகர் டோண்டு அவர்களே.கூடிய விரைவில் நாம் அனைவரும் சேர்ந்து போராடி அகண்ட பாரதத்தை அடைந்து விடுவோம். அமெரிக்காவின் துணை இருந்தால் எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். அமெரிக்க தலையீடு இருந்தால் கூடவே மிசினரிகளின் தலையீடும் வந்து விடும் என்று நினைக்கிறீர்களா?x

Anonymous said...

எங்களுக்கு தனிநாடு கிடைத்தாலும் போக மாட்டோம், உண்டியில் வரு'மானம் இல்லாமல், உழைக்காமல் வாழ எங்களுக்கு என்ன தலையெழுத்தா ? பகவான் நோக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும்.

said...

கொன்டைய்யர் அவர்களே. வருகைக்கு நன்றி. நாடே நம்முடையது ஆனவுடன், நாம் ஏன் உழைக்கவேண்டும்?அவா அவா வேளையெ அவாஅவா செய்தால் போதும்

Anonymous said...

இப்போ மட்டும் இந்தியா யார் கட்டுபாட்டில் இருக்காம்?எங்க கட்டுபாட்டில் தானே இருக்கு.

said...

வ்ருகைக்கு நன்றி சோ அவர்களே. நீங்கள் தான் துக்ளக் என்னும் பத்திரிக்கையை நடத்துகிறீர்களா?. இந்தியாவை ஆள்வது யார் என்று நான் தெளிவாக சொல்லி உள்ளேனே.

said...

இதுபோலெல்லாம் எழுதுவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா சாணக்கியன்.

அசுரன், தியாகு இதர பல தமிழர்கள் அமெரிக்காவை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள். நீங்கள் இப்படி சொல்கிறீர்களே!

உங்கள் பதிவு பற்றி தமிழ்மணத்திற்கு புகார் செய்கிறேன்.

மரியாதையாக உங்கள் பதிவை அழித்துவிடுங்கள். வீணாக எதிரிகளை சம்பாதித்து கொள்ளாதீர்கள்.

வாழ்க திராவிட இந்திய நாடு!

said...

Super சார். கலக்கிட்டீங்க!!!. அகண்ட பாரதம் கிடைத்தால் திராவிட திம்மிகளை என்ன செய்வதாக உத்தேசம்? export all of them USA?

said...

நாசாவும் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதையும் அமெரிக்காவிற்கு எடுத்து சொல்லுவோம் நண்பரே

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாசிலா அவர்களே

//இதுபோலெல்லாம் எழுதுவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா சாணக்கியன்//

வெட்கமா அப்படி என்றால் என்ன?

//அசுரன், தியாகு இதர பல தமிழர்கள் அமெரிக்காவை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள். நீங்கள் இப்படி சொல்கிறீர்களே!//

அவர்கள் அமெரிக்காவை எதிர்த்து குரல் கொடுத்தால் தானே நமக்கு எளிதில் அமெரிக்க ஆதரவு கிடைக்கும்

//உங்கள் பதிவு பற்றி தமிழ்மணத்திற்கு புகார் செய்கிறேன்.
//
நான் பிறகு அம்மாவிடம் புகார் செய்வேன்

//மரியாதையாக உங்கள் பதிவை அழித்துவிடுங்கள். வீணாக எதிரிகளை சம்பாதித்து கொள்ளாதீர்கள்.
//

அம்மாவின் ஆசியும் ஆதரவும் இருக்கும் வரை என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

நீங்களும் எங்கள் பக்கம் வந்து விடுங்கள்

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருண்மொழி அவர்களே
//Super சார். கலக்கிட்டீங்க!!!. அகண்ட பாரதம் கிடைத்தால் திராவிட திம்மிகளை என்ன செய்வதாக உத்தேசம்? export all of them USA?//

அந்த பிரச்சனையை கையாள தான் இன்றைய நவீன உலகில் அனைவராலும் ஏற்று கொள்ள பட்ட அணுகுமுறை இருக்கிறதே!
அவர்களை தீவிரவாதிகள் என்று பட்டம் கட்டி கதையை முடித்து விடலாம்.

said...

//நாசாவும் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதையும் அமெரிக்காவிற்கு எடுத்து சொல்லுவோம் நண்பரே//

பெயருக்கேற்ற சரியான கருத்தை சொன்னீர்கள் Great அவர்களே . NASAவின் ஆராய்ச்சி நோக்கத்தை மாற்றி விட்டு அவர்களை இந்திர லோகம், திருபாற்கடல்,நரகம் மேரு மலை ஆகியவை எங்கு உள்ளது என்று ஆராய சொல்வோம்