இஸ்ரேலும் அகண்ட பாரதமும்- அமெரிக்காவின் எஞ்சி நிற்கும் கடமைகள்

இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க ராணுவ,அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு யூதர்களின் பங்கு முக்கியமாக இருந்தது. அன்று யூதர்கள் நாடு இல்லாத நாடோடிகளாக வாழ்ந்தார்கள். யூதர்களின் உதவிக்கு பிரதி உபகாரமாக அமெரிக்க அரசு, அவர்களுக்கு இஸ்ரேல் என்னும் நாட்டை உருவாக்கி கொடுத்தது. அன்று யூதர்கள் இருந்த நிலையில் இன்று ஆரியாகள் இருக்கிறோம். அதாவது இன்று கணிப்பொறி துறை வளர்ச்சிக்கு நாம் ஆற்றும் பங்கினை ஜார்ஜ் புஷ் அறிவார். மேலும் NASA நிறுவனத்தி தலமை விஞ்ஞானி முதல் வாயிற் காவலர் வரை நாம் தான் என்பதை தங்களுக்கு வந்த Forward mail மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.இவ்வாறு அமெரிக்காவின் முன்னேற்றத்திற்க்காக பாடுபடும் நாம், மொய்னோ மற்றும் திராவிட திம்மிகளின் சர்வாதிகார ஆட்சியினால் நாடிழந்து அகதிகளாக உலகமெங்கும் வாழ்கிறோம். அமெரிக்கா யூதர்களுக்கு இஸ்ரேல் வாங்கி தந்ததை போல் நமக்கு அகண்ட பாரதத்தை வாங்கி கொடுக்க வேண்டிய நாள் நெருங்கி வருகிறது. இதற்கு சுப்ரமணிய சுவாமி போன்ற சர்வ தேச தலைவர்கள் உடனடியாக lobby செய்ய தொடங்க வேண்டும்

யுவான் சுவாங் சுற்றி வந்த பகுதி எல்லாம் சீனாவுக்கு சொந்தம்(Survival Strategy)

கடந்த சில காலமாக அருணாச்சலபிரதேசம், திபெத் மற்றும் பல பகுதிகளை தனது பகுதிகளாக சீனா கூறி வந்தது. இந்தியாவில் உள்ள தோழர்களும் இந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெற்று எப்போது சீனாவோடு இந்தியா இணையும் என நீண்ட காலமாக காத்து கிடந்தனர்.இதனிடையே திடீரென சீனா,யுவான் சுவாங் பார்வையிட்ட பகுதி அனைத்தும் சீனாவின் பகுதி என அறிவித்துள்ளது இதன் மூலம் இந்தியாவை சீனா ஆக்ரமிக்கும் நிலை உருவாக உள்ளது. சீனா அமெரிக்காவிடம் சாப்ட்வேர் மற்றும் இதர பொருள்களை இந்த இணைப்பின் மூலம் 10 மடங்கு மலிவாக கொடுக்க ரகசிய உடன்பாடு செய்துள்ளதாக கூற படுகிறது. எனவே அமெரிக்காவும் இதனை சீனாவின் உள்நாட்டு பிரச்சனையாக அறிவிக்க கூடும் என்று தெரிகிறது.
"சுவர்ணமால்யாவின் அழகும் விஜயேந்திர மாமுனியின் தவமும் என்ற தலைப்பில் SFI மற்றும் CPM தோழர்களுக்கு சித்தாந்த வகுப்பு எடுத்து கொண்டிருந்த என்.ராம் அவர்களிடம் இதுபற்றி கேட்டதற்கு, இது முழுக்க முழுக்க உண்மை என்றும் சைனா பெரு மனது வைத்து இந்த முயற்சிக்கு முடிவு செய்துள்ளதாக கூறினார். மேலும் புதிய ஆட்சி முறை எப்படி இருக்க வேண்டும் என்று அறிய காஞ்சி காமகோடி விஜயேந்திரர், சங்கரையா, ஞாநி, வரதராஜ ஐயங்கார் மற்றும் மருதையன் தலைமையில் ஒரு குழு அனுப்ப படும் என்று கூறினார்.மேலும் தற்போது இருப்பது போல் மேல் சாதியினரை பொலிட்பீரோவில் பெரும்பான்மையினராக நிரப்பாமல், முழுவதுமாகவே மேல் சாதியினரை கொண்டு புதிய பொலிட்பீரோ உருவாக்கப்படும் என்றார்.இதனிடையே காஞ்சி ஜெயேந்திர சுவாமிகள் தலைமையில் ஒரு ஆன்மீக குழு சைனாவிற்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார். 2000 ஆண்டுகளுக்கு முன் சென் புத்த மதத்தை தோற்றுவித்த போதி தர்மர் காஞ்சிபுரத்திலிருந்து சைனாவிற்கு ஆன்மீக பயணம் சென்றதை நினைவு கூர்ந்தார். இன்று வாழும் சென் ஜெயேந்திரர் நடிகைகள் குழுவிற்கு தலைமை தாங்கி ஆன்மீக பயணம் செய்ய இருப்பதாக கூறினார்.
மேலும் அதிகாரம் பொலிட்பீரோவிற்கு வந்த பின்பு புதிய கம்யூனிச ஆட்சியை எதிர்க்கும் குழுவிற்கு ஞாநி மற்றும் மருதையன் ஆகியோர் தலைமை தாங்குவார்கள் என்றார். எந்த ஒரு சித்தாந்தத்தின் வெற்றியும் அதை எதிர்க்கும் குழுவை கையாலுவதில் தான் உள்ளது. எனவே அந்த இருவரையும் எதிர்க்கும் குழுவிற்கு தலைமை ஏற்க வைத்தால், உண்மையான எதிர்க்கும் தலைவர்கள் தோன்றுவதை தடுக்க முடியும் என்றும் பிற்காலத்தில் உண்மையான எதிர்புணர்வோடு வளருபவர்களை இது போன்ற தலைவர்களை வைத்து அடையாளம் காண்பதும் எளிதாக இருக்கும் என்றார்.மேலும் அனைத்து ஊடகங்களும் பெரும்பாலும் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாலும்,மீதி உள்ளவற்றையும் தங்களது கட்டுபாட்டில் எடுத்துவிட இருப்பதால், அந்த ஊடகங்களின் மூலம் இந்த இருவரும் எதிர்ப்பு தலைவர்களாக இந்தியா எங்கும் பிரகடனபடுத்தபடுவார்கள் என்றார்.
இதனிடையே RSS தலைவர் சுதர்சனம்,ஆரியர்கள் சைனாவிலிருந்துதான் இந்தியாவிற்கு வந்தார்கள் என்று நிருபர்களிடம் தெரிவித்தார். அதற்கான ஆதாரங்களையும் அவர் நிருபர்களிடம் அளித்தார். இந்த ஆதாரங்களுடன் தான் சீன தலைவர்களை சந்தித்து யாரை பொலிட்பீரோ உறுப்பினர்களாக ஆக்க வேண்டும் என்றும் விவாதிக்க போவதாக கூறினார். என்.ராம் அவர்களும் தன்னோடு வரப்போவதாக கூறினார்.
இந்த செய்தி பற்றி திரு.கருணாநிதியிடம் கேட்டதற்கு குடும்பம் தான் தனது கட்சி என்றும் தனது குடும்பத்தினருக்கு பொலிட்பீரோவில் இடம் கொடுத்தால் அது திராவிட இனத்திற்கே கொடுத்தது போல்தான் என்றார். இதனிடையே தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், கனிமொழி. ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு பொலிட்பீரோ பதவி கொடுக்க இரகசிய உடன்பாடு எற்பட்டுவிட்டதாக கூற்ப்படுகிறது.
இதனிடையே CPM கட்சியை சேர்ந்த தலைவர்கள், அதிகார பரிமாற்றம் கிடைத்தபின் இந்தியாவில் மாபெரும் கலாச்சார புரட்சி நடத்த இருப்பதாக தெரிவித்தனர். இது மாவோ நடத்தியதை விட பல மடங்கு பலமாக இருக்கும் என்று கூறினார். இந்த கலாட்சார புரட்சியின் மூலம் 30 கோடி ஏகாப்த்தியவாதி மக்களை கொன்று பாட்டாளி மக்களை விடுதலை செய்ய போவதாகவும், சுமார் 10 லட்சம் கல்லூரி மற்றும் பள்ளி கூடங்கள் இடிக்கப்படும் என்றனர். மேலும் சாப்ட்வேர் மற்றும் உற்பத்தி துறை போன்ற பணியில் உள்ளவர்களுக்கு சம்பளத்துக்கு பதில் மூன்று வேலை சீனாவில் தயார் செய்ய பட்ட உணவு வழங்கப்படும் என்றார்.
சற்று முன் வந்த செய்தி-JVP இயக்க தலைமையினர் யுவான் சுவாங் இலங்கைக்கும் சுற்று பயணம் செய்ததாகவும் அதற்கான சான்றுகளை கொண்டு வந்து என்.ராம் அவர்களிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

ஜெயலலிதாவை கொல்ல சதி

ஜெயலலிதாவை நேருக்கு நேர் நின்றோ, நீதிமன்றம் மூலமாகவோ மோத முடியாத கலைஞர் அரசு அவரை கொலை செய்ய முயற்சி செய்தி உலக அரங்கையே உலுக்குகிறது. இதற்க்கெல்லாம் அன்னை ஜெயலலிதா பயப்பட மாட்டார். சென்னா ரெட்டியின் 70 வது வயதில் சென்னாரெட்டி, அன்னையை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற போதே பயப்படாதவர் அன்னை ஜெயலலிதா.
ஜெயலலிதாவை கொல்ல முயற்சி செய்தது கூட எங்களை பாதிக்கவில்லை. அவரை ஒரே ஒரு நபர் விட்டு அதுவும் அவர் கையில் ஒரு ஆயுதம் கூட கொடுக்காமல், கொன்ற பிறகு தப்பிப்பதற்கு ஒரு ஏற்பாடு கூட செய்யாமல், ஏதொ ஒரு தினகரன் பணியாளரை கொலை செய்வது போல் அவரை கொல்ல முயற்சி செய்து அவரது பெருமைக்கே கலங்கம் ஏற்படுத்தி விட்டனர்

சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம்?

எந்த ஒரு இனத்தையும் அழிக்க முதன் முதலாக பயன் படுத்தும் ஆயுதம்,அந்த இனத்தின் தொல்லிய வரலாற்றினை அழிப்பதில் தான் தொடங்குகிறது. ராமர் பாலம் என்பது ஆரியர்கள் பல லட்சம் ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்தார்கள் என்பதற்கான சாட்சி. இதன் மூலம் லெமூரியா கண்டத்தின் மற்றும் இந்தியாவின் பூர்வ குடிகள் ஆரியர்கள் என்பது நிருபிக்கபட்டு விட்டது.இதனை அமெரிக்காவின் NASA நிறுவனம் கூட உறுதி செய்துள்ளது.அப்படி பட்ட ஆதாரத்தை அழிப்பதின் மூலம், ஆரியர்களின் தொல் வரலாற்றை அழித்து விடலாம் என சில அரசியல் கட்சிகள் திட்டமிடுகின்றனர். அவ்வாறு செய்து விட்டு, ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தார்கள் என்ற கட்டு கதை வாதத்தை பரப்ப சதி திட்டம் தீட்டுகின்றனர் .அதன் பிறகு ஐரோப்பாவிலிருந்து வந்த் ஆங்கிலேயர்களை விரட்டியது போல் நம்மையும் விரட்ட திட்டமிடுகிறார்கள். இப்படி பட்ட சதி திட்டத்தை முறியடிக்கவே நாங்கள் சேது திட்டத்தை எதிர்க்கிறோம்

இந்த பதிவு எதற்க்காக?

தமிழ் பதிவு உலகத்தில் அனைத்து பிரிவினரின் கொள்கைகளை பரப்பவும் பல பிளாகுகள் உள்ளன. பெறும் பாலாக அனைத்து பிரிவினரும் நம்(ஆரியர்) மீது பன்முக தாக்குதல் நடத்துகின்றனர். அனைவருக்கும் நம் மீது உள்ள தவறான புரிதலை நீக்கி உண்மையை புரிய வைப்பதே இப்பதிவின் நோக்கம். மேலும் பல தலைவர்கள் பற்றி மக்களிடையே உள்ள தவறான புரிதலை நீக்குவதும் மற்றொறு குறிக்கோள்

முதல் பதிவு

இது சோதனை பதிவு